Saturday, December 29, 2018

குரு மழை

தேகத்தின் களைப்பு தீர
மெத்தை சுகம் கொண்டு
கனவுலகில் களிப்புற்றிருக்க
வந்தாளே அவள் மெல்ல

தென்றலுடன் அவள் மிதக்க
மனம் சிலிர்க்கும் மணத்துடன்
காமம்  களம் இறக்கி
மெல்லிசையாய் கால் பதித்து

காதலில் கை பிடிக்க
ஓடி வந்த என்னை
ஏமாற்றிச் சென்றாயடி மழையே
என் தூக்கம் தொடர்கிறேன் அடி

Tuesday, August 23, 2016

யார் பிறந்தார்?

நதியின் வழி சென்று கடலை சேர்ந்தோம்
விதியின் வழி சென்று மரணம் கண்டோம்

தோன்றியொன் யாரென்று அறியா நிலையில்
பிறந்தோம் என்று கூச்சலிட நான் யார்

அறிவின்  ஆசையே வாழ்க்கை எனக்கண்டு
மனதின் போக்கில் வீதியில் தொலைந்தோம்

பிறப்பே மாயை ஆனபின் மரணமும் பொய்யோ
அறிவும் பொய்யானபின் அனைத்தும் பொய்யோ

பொய்யான பிறப்பை கொண்டாடிக்  களிக்க
மெய்யான பிறப்பென்று ஏதும் உண்டா