Thursday, August 14, 2014

மழை மேல் காதல்

தனிமையில் பல இரவுகள் உனக்காக 
ஏங்கி பல கனவுகள் காண 

உன் தேக சுவாசம் நுகர 
உன் கால் அடி சத்தம் கேட்டு 

ஓடோடி வந்து உன்னை தழுவ 
தேகமே சிலிர்ததடி 

கண் இமைகளில் தவழ்ந்தோடி 
உதடுகளில் முத்தம் பதித்து

மார்போடு எனை அணைத்து
ஸ்பரிசம் எங்கும் நீ தழுவ

உள்ளம் நெகுழுதடி
உடலும் குளிருதடி

Wednesday, August 15, 2012

மதி கொன்று விதி வெல்வோம்


இறை தேட வந்தோமையா, இன்னும் ஏன்
நீ தந்தவற்றை தேடி அலைகிரோமோ!
விதியாய் நீ கொண்ட நாடகத்தை நான் 
சுமந்தேனே என்ற ஆணவத்தை
அழிதுவிடும்போது பிறந்ததோர் ஞானம்.
இறை சூட்சமம் அறிய வேண்டாம் ஐயா
என்னுள் நான் என்னை நீயாக காண வேண்டும் ஐயா