Thursday, November 27, 2014

காணாத கண்

கண்டவற்றை காண கண் இருந்தும்
காணாத ஓர் பொருள் நோக்க

மனத்தால் பெற்ற பழியை
கலங்கா நினைவு துடைக்க

வழிதான் தேடிச்சென்றும்
அறிவால் நின்றது தான் கலக்கம்

கண்கொண்டு கண்ட மாயை விலக
கண் இன்றி காண்பதே மெய்யாம் 

Monday, November 24, 2014

அவனும் அவளும்

நீரினில் சிக்கி மரணிக்கும் எறும்பை
காகக்கொன்றாள் ஒரு இலையை
துடித்தால்தான் உயிர் என்று அவள் நினைக்க
அவள்  நினைவில் நித்தம் துடித்தான்

ஒற்றை நாளில் மறிக்கும் மலரை
அரவணைத்த  அவளின் அன்பிற்கு
என்றும் அவள் நினைவில் வாழும் அவனை
அடையாளம்  காணத் தெரியவில்லை