Monday, March 7, 2011

தினம் ஓர் மகளிர் தினம்

செல்லப்புன்னகை கொண்டு மயக்கி,
மனம் கவர்ந்த மழலையாய்,

வெகுளியாய், ஆனந்தமாய், அழகாய்
குரும்புச்சேட்டைகளின் அரசியாய்,

வைரம் போன்ற ஒளியுடன்
தன்னை உணர்ந்த நங்கையாய்

உறவுகள் பல பெற்றும்
அவன் ஒருவனின் காதலியாய்

பொறுப்புகள் பல பெற்றும்
தலைவன் தோள்கொடுக்கும் தலைவியாய்

செல்வத்தின் செல்வமாம் மக்கட்செல்வம்
கண்டறிந்து பூரித்த அன்னையாய்

மக்கள் யாவரும் பிரிந்தபின்
கணவனின் உற்ற தோழியாய்

மறிக்கும் தருவாயிலும் தான்
இளமையில் பூரிக்கும் கிழவியாய்

பெண்ணே!
என் அன்னையாய் குழந்தையாய்
தங்கையாய் தோழியாய் தலைவியாய்
இன்னும் எத்தனையோ பரிமாணம்

உன் நினைவில் ஒருநாள் போதாது
வருடம் முழுதும் வாழ்த்துகிறேன்

Sunday, December 5, 2010

கிறுக்கன்

நான் என்ற பொருளின் பொருள் உணர
ஈசனாய் எறிந்து மாயனாய் மறைந்து
பரம் பொருளே இவன் என்றானோம்
நானும் இல்லை நாணும் இல்லை
வெறும் கதை, இதன் பொருள்
உணர்வாயே செம்மனமே

இவன் எது அவன் எது
எல்லாம் உன்னது ஆனது பின்
நான் எது; எல்லாம் நீ
என்பால் நாணும் இல்லை
எல்லாம் நீயன்றி ஏதுண்டு

காமப்பொருள் காண்பாய்
கருமப்பொருள் காண்பாய்
கருவின் பொருள் காண்பாய்
திருவின் பொருள் காண்பாய்
காணும் வேளையில் அனைத்தும்
மறை பொருளே என்றுணர்ந்து
மனம் அது செம்மை ஆனபோதும்
எல்லாம் ஓர் பொருள் என்பாய்.
இன்னும் பொருள் காணேனே
உணர்வற்ற போதும் உணரேனே
இவன் பொருளற்ற நிலைகாண
விழி திறப்பாயோ.

அவன் வேண்டும் இவன் வேண்டுமென
அனைத்தும் வேண்டுமென்பேன்
இன்று அவனும் வேண்டாம்
வேறெதுவும் வேண்டாம், யாவும்
அவன் என்றாகின் இங்கு
நான் இல்லை என்றாதலின் பின்
வேண்டும் எனபது யாருடையதோ
பொருளே இல்லாத பின்
இது அது ஏதும் இல்லையோ.

பொருள் உண்டென்ற மாயை
உணர நான் இங்கில்லை- பின்
உணரல் யாருடையதோ அவனே
நானாகி கருமம் செய்வித்து
விடை கான் என்கின்றான் அவன்;
இவன் இல்லை நான் இல்லை
எல்லாம் அவன் இல்லால்
வேறொன்றும் இல்லை.