Thursday, February 25, 2010

அஹம் பிரம்மாஸ்மி

ஆதி முதல் அந்தம் வரை
அனைத்தும் உன் ஒளியாய் இருக்க

என் மனம் இருளில் சிக்கி நிற்குமோ ?


என்னுள் இருக்கும் நீ ஒளியாகின்

என் பயம் நீக்க மருந்தேதும் தேவையோ?

அணைத்தும் நீ என்றபின்

நான் என்று ஒன்றில்லை - என்றாகி

நான் செயலற்றவன், சக்தியும் அற்றவன்


உன் துளியில் ஒரு அதிசயம்

நான்என்பதால்தானோ நீ

என் மூலமாய் உன்னையே

அதிசயிதுக்கொள்ளும் -- அஹம் பிரம்மாஸ்மி