Monday, April 25, 2011

நீ கேட்டதால்!!!

மானே தேனே என்று உன்னை அழைத்து
எட்டா பொருள் ஆக்கமாட்டேன்
உன்னை அலங்கரிக்க மொழி தேடி நின்றபோது
மொழியை நீ வந்து நின்றாயே.

பூ இடையே இருந்த வண்டு
மறைந்திருந்து
என் மெய் மறக்கவைக்கும்
உன் விழியாய் தொன்றிட்ரே

உன் உதடோர குரும்புச்சிரிப்பால்
ஏற்பட்ட கன்னக்குழியில் நான் வீழ்ந்து ,
எழும்ப வழி இருந்தும்
மோகத்தால் மனம் இல்லை.

மலர் கொண்ட மனம் அது
உன் நறுமணம் சூழ்ந்த வனம்
கிளையில் ஓடும் கோடி கண்டபோது
உன் சுருள் முடி மனதை கவரும்

உன் மழலை பேச்சு கேட்டபின்
இனி காதுகள் எதற்கு
உன் குழையும் சிணுங்கல் குரல் கேட்ட
செவிகள் வேறேதும் கேட்க மறுக்கும்

கடலும் சிறிதாய் தோன்ற இந்த
உலகும் சிறிதாய் போனதே,
என் வலி கண்டு நீ பொழிந்த
அன்பும் அரவணைப்பின் முன்

இறை காட்டிய பல விந்தைகளில்
உன் உறவு விந்தையிலும் விந்தை
மடை திறந்தார் போல் பொழியும்
அவன் அன்பில் நீயும் என் குழந்தை

For tounglish version
maane thene yendru unnai azhaithu
yetta porul aakka maatten
Unnai alangarikka mozhi thedi nindrapothu
mozhiyaai nee vanthu nindraye.

Poo idaiye inruntha vandu,
marainthirunthu
yen mei marakkaveikum
un vizhiyaai thondrittre.

un uthadora kurumbu sirippaal
yerpatta kanna kuziyil naan veeznthu,
yezhumba vazhi irunthum
moghatthaal, manam illa.

malar konda manam athu
un narumanam soozntha vanam
kilaiyil oodum kodi kandapothu
un surlu mudi manathai kavarum

un mazhalai pechu kettapin
ini kathukal yetharu
un kuzhaium sinungal kural ketta
sevigal verethum ketka marukkum

kadalum sirithai thondra intha
ulagum sirithai ponathe,
yen vali kandu nee pozhintha
anbum aravanaippin mun

irai kaatiya pala vinthaigalil
un uravu vinthailum vinathi
madai thiranthaar pol pozhium
avan anbil neeum yen kuzanthai

Friday, April 22, 2011

ஏன் இத்தனை கேள்வி

இருந்தாலும் மறைந்தாலும் நீயும்
நானும் அதுவாகவே இருக்க
அவனே வந்தாகினும் ஏதும் மாறப்போவதில்லை
விதியின் வழிதான் நாடகம் என்றபின்
முடிந்த பின்னும் ஒன்றும் விளங்கப்போவதில்லை!
ஏன் வாழும்போது மட்டும் இத்தனை கேள்வி.

Monday, March 7, 2011

தினம் ஓர் மகளிர் தினம்

செல்லப்புன்னகை கொண்டு மயக்கி,
மனம் கவர்ந்த மழலையாய்,

வெகுளியாய், ஆனந்தமாய், அழகாய்
குரும்புச்சேட்டைகளின் அரசியாய்,

வைரம் போன்ற ஒளியுடன்
தன்னை உணர்ந்த நங்கையாய்

உறவுகள் பல பெற்றும்
அவன் ஒருவனின் காதலியாய்

பொறுப்புகள் பல பெற்றும்
தலைவன் தோள்கொடுக்கும் தலைவியாய்

செல்வத்தின் செல்வமாம் மக்கட்செல்வம்
கண்டறிந்து பூரித்த அன்னையாய்

மக்கள் யாவரும் பிரிந்தபின்
கணவனின் உற்ற தோழியாய்

மறிக்கும் தருவாயிலும் தான்
இளமையில் பூரிக்கும் கிழவியாய்

பெண்ணே!
என் அன்னையாய் குழந்தையாய்
தங்கையாய் தோழியாய் தலைவியாய்
இன்னும் எத்தனையோ பரிமாணம்

உன் நினைவில் ஒருநாள் போதாது
வருடம் முழுதும் வாழ்த்துகிறேன்