Tuesday, December 23, 2014

ஒரு தலை ராகம்

அவளைப் பிடித்ததால் தான் நெருங்கினேன்
அவளோ சிணுங்கக்கூட இல்லை

கணவில் அவள் என்னை தருவியபோது
கிடைத்த கிளர்ச்சியை விட

அவள் அறியாது சீண்டிய அவள்
கூந்தல் எந்தன் உயர் குலைத்ததே

நீ சொல்லாத பல காதல் கவிதைகள்
கேட்டதுபோல் நான் பாடினேன்

அன்று நீ சொன்ன வசை சொற்கள்
இன்றும்  இன்னிசையாய் என்னை மயக்கியது

நீ அருகில் நின்ற போதும்
ஆறாத தேக தாகம்

உன்னை மறைந்து ரசித்த பொது
தீர்த்தது உள்ளத்தின் தாகத்தை

காணாத பல நாட்கள் போயினும்
காணும் வரை காதிருக்கத்தொன்றும்

காதிருபத்தின் வலி வேதனைதான்
ஆயினும் கோவம் இல்லை காதல் மட்டுமே

உன் தோழியிடம் நீ சொன்ன
குறும்பு பேச்சுக்கள் கேட்டபோதெல்லாம்

எனக்காக அவளிடம் நீ தூது
சொன்னாயோ என்று நினைத்தேன்

என்று நான் உன்னிடம் சொல்வது
என்றுமே சொல்வதில்லை என் காதலை 

Monday, December 22, 2014

உள் ஒளி

கண்டேன் கண்டன பல கற்றேன்
கற்றேன் கேட்டவை பல கண்டேன்

மூடனாய் நின்றோருடன்
மூடனாய் நான் ஆக

விஷமியாய் நின்றவரிடம்
விஷமியாய் நான் மாற

மதியோனுடன் நான் சேர
மதியுடையான் ஆனேனே

அவரவர்   சேர்க்கையால்
அவனவன் நான் ஆக

பூதத்தின் சேர்கையில்
கூடாய் இவன் ஆக

ஈசனாய் எறிந்த நின்
தீயாய் ஆவேனோ 

Thursday, December 11, 2014

ஆண்டான் ஆண்டபின்

அன்னமும்  ஆகுமோ  அமுதாய்
பசியும் ஆனது விரதமாய்
பயணம் என்பது யாத்திரையாய்
இசையோ அவன் மீது கீர்த்தனையாய்
இல்லோ கோவில் ஆகா
செயலே பிறர்க்கு சேவையாய்
ஆவது ஆனபின் மாறுவது
ஆண்டான் நினைவின் பயனால்
மனிதனும் மாறுவான் ஈசனாய் 

Thursday, November 27, 2014

காணாத கண்

கண்டவற்றை காண கண் இருந்தும்
காணாத ஓர் பொருள் நோக்க

மனத்தால் பெற்ற பழியை
கலங்கா நினைவு துடைக்க

வழிதான் தேடிச்சென்றும்
அறிவால் நின்றது தான் கலக்கம்

கண்கொண்டு கண்ட மாயை விலக
கண் இன்றி காண்பதே மெய்யாம் 

Monday, November 24, 2014

அவனும் அவளும்

நீரினில் சிக்கி மரணிக்கும் எறும்பை
காகக்கொன்றாள் ஒரு இலையை
துடித்தால்தான் உயிர் என்று அவள் நினைக்க
அவள்  நினைவில் நித்தம் துடித்தான்

ஒற்றை நாளில் மறிக்கும் மலரை
அரவணைத்த  அவளின் அன்பிற்கு
என்றும் அவள் நினைவில் வாழும் அவனை
அடையாளம்  காணத் தெரியவில்லை 

Saturday, November 22, 2014

எங்கோ தேடினேன்

அவனோ கண்டதையும் கண்டு
பின் கானா  இடம்  சென்றிருக்க
அவனை  எங்கே  தேடுவேன்

யாத்திரைகள்  பல  சென்று
கோ இல் பல தேடி
யோகம் பல கற்று
மந்திரங்கள் பல செய்து
நோன்புகள் பல கொண்டு
மூச்சையும் நன்கடக்கி
துறவும் ஏற்பட்ட பின்
காண இடம் அதை
எங்கே தேடுவேன்

செல்லா இடம் நோக்கி
செல்லும் பாதை கண்டபின்
சொல்லா வியப்பில் கண்டேன் கண்டேன்
யாதும் அவன் என்றால்
இடம் அது ஒன்றில்லை
பின் நானும் நான் இல்லை

Friday, November 21, 2014

ஒன்றில் கறைந்தேன்

சிலநாள் காத்திருந்தேன்
பலநாள் காத்திருந்தேன்
ஆயிரம் ஆசைகள் கொண்டு
பல திசை தேடினேன்
ஒரு நாள் ஓர் திசை 
உள் திசை சென்று
உந்தன் இசை கேட்டு
கொண்டேன் ஓர் ஆசை
அனைத்தும் மறந்தேன்

ஒன்றில் கறைந்தேன்

Thursday, October 23, 2014

பிரிவு

பிரிவும் அழகுதான்
இமைகள் பிரிவதால் பார்வை  பிறக்கிறது
உதடுகள்  பிரிவதால் மொழி பிறக்கிறது
ஓசை  பிரிவதால்  மௌனம் பிறக்கிறது
அறிவு பிரிவதால் ஞானம் பிறக்கிறது

Sunday, August 24, 2014

இன்று பிறந்த நாள்

வானம் ஜதி போட
புவி இசை பாட
மணம் கமழுது
மனம் மயங்குது

மழலை வாழ்துறைக்க
மழையோ உளம்  நனைக்க
பிறந்தது புது வருடம்
தேவை இறை இணக்கம்

Thursday, August 14, 2014

மழை மேல் காதல்

தனிமையில் பல இரவுகள் உனக்காக 
ஏங்கி பல கனவுகள் காண 

உன் தேக சுவாசம் நுகர 
உன் கால் அடி சத்தம் கேட்டு 

ஓடோடி வந்து உன்னை தழுவ 
தேகமே சிலிர்ததடி 

கண் இமைகளில் தவழ்ந்தோடி 
உதடுகளில் முத்தம் பதித்து

மார்போடு எனை அணைத்து
ஸ்பரிசம் எங்கும் நீ தழுவ

உள்ளம் நெகுழுதடி
உடலும் குளிருதடி