Tuesday, August 23, 2016

யார் பிறந்தார்?

நதியின் வழி சென்று கடலை சேர்ந்தோம்
விதியின் வழி சென்று மரணம் கண்டோம்

தோன்றியொன் யாரென்று அறியா நிலையில்
பிறந்தோம் என்று கூச்சலிட நான் யார்

அறிவின்  ஆசையே வாழ்க்கை எனக்கண்டு
மனதின் போக்கில் வீதியில் தொலைந்தோம்

பிறப்பே மாயை ஆனபின் மரணமும் பொய்யோ
அறிவும் பொய்யானபின் அனைத்தும் பொய்யோ

பொய்யான பிறப்பை கொண்டாடிக்  களிக்க
மெய்யான பிறப்பென்று ஏதும் உண்டா