Tuesday, August 4, 2020

கொரோனா கதறல்கள்

இயந்திரங்களின் கலவர கர்ஜனை சூழ 
கொன்றை மலர் வாசம் ஏந்தி 
என்னைத் தழுவிய வாடை தென்றலால் 
மீண்டும் ஒரு முறை கண்விழித்தேன்!

ஆதவனோ மோகத்துடன் கண்ணாமூச்சி ஆட 
என் கண்களும் சோர்வில் தள்ளாட 
மதி மயங்கின் உடல் சுருண்டு 
இருந்த அறையிலே துலைந்து போனேன்!

கனவுகளும் பெரிதாய் ஒன்றும் இல்லை 
அடுத்த ஆதி வைக்க மனமில்லை 
என்ன செய்வது என்றும் புரியவில்லை 
மனக்கிளர்ச்சியால் தடுமாறி மீள முடியவில்லை!

இதுபோல் நாட்கள் மெல்ல செல்ல 
செய்வது யாதென நானும் அறியேன் 
பின் அறிவு நீங்க பெற 
செய்வது யாதும் அவன் என்றேன்!

உயிர்க்கொல்லி நிச்சியம் உலகெங்கும் பரவிட 
உயிர் உள்ளதே அது போதும் 
என்று பலரும் திகைத்துப் போனபின்னும் 
கனவு கலையும் காலம் வருமோ!

என்னை நானும் தொலைத்தேன் என்பேனோ 
என் இறைவனை தேட முனைவேனோ 
அறுவம் ஆனா இறைவன் கால்பற்றா 
அறுவமாய் நாச்சியனாய் அவனே வந்தானே!

என் இயலாமை எனக்குநர்த்த மீண்டும் 
என் கர்வம் தொலைக்க மீண்டும் 
அவன்வசம் மீள இதனை கூத்தும்  
அவனே செய்யும் பெரும் கருணையன்றோ!

கடலில் தத்தளிக்கும் படகின் மேல் 
துடுப்பாய் உன்னை பற்றி சரணடைந்தோம் 
உடுப்பை இந்த உடல் நீங்கி 
என் உயிராய் நின்றவனே போற்றி!