Saturday, August 8, 2015

வேண்டாம்

வாலிபத்தின் தேடலில்
கண்டான் ஆடவன் மாதுவை
காதல் என்றான் காமம் என்றான்
களிப்பில் காதல் செய்தபின்

விந்துகள் சில கோடி
சிந்தி அதில் ஒன்றாய்
மொட்டினை நுகர்ந்து அதை
மலராய் மலரச் செய்தான்

மாதங்கள் ஒன்பதினை கடக்க
கண் காது தலை
இருதயம் நுரை என
கை கால்களும் வளர்ந்து

தன் கூடிணை கிழித்து
மண் என்ற மாயையில்
காலம் கணிதம் என
பல கணக்கினை கொண்டு

பல புன்னகை இடையே
கண்ணீருடன் ஓ என்று ஒலித்து
முதல் சுவாசத்தை கொண்டு
தன் பயணத்தை தொடங்கினான்

இன்பம் துன்பம் தெரியா
கேளிக்கை விளையாட்டு வெளையாடி
உறவுகள் சூழ மகிழ்ந்து
புது நட்பினை கொண்டு

பருவ ம் வந்தபின்
கல்வி கரை கண்டு
அறிவோனாய் புகழப்பெற்று
பேரும் புகழும் சூழ

வாலிபத்தின் வாசனை அறியா
உணர்வும் மொழியும்  புரியா
உடலின் மாயையில் சிக்கி
காமத்தில் மூழ்கி தவிக்க

மாற்றாள் ஒருத்தியை கண்டு
மயங்கி காதல் செய்ய
உடலும் உணர்வும் இணைந்து
காமம் தீர கலந்து

காலமும் விரையச்செல்ல
இளமை நீங்க நரை தோன்றி
பார்வை மங்கி செவிகள் தளர்ந்து
உணர்வுகள் மரத்து அழகும் சிதைந்து

துணையும் நீங்க துணையாய்
கொள் ஒன்றுமட்டும் கொண்டு
நிமிரவும் வழி இல்லா
கூனாய் நகர்வான் கிழவன்

காதல் இசைத்த மொழி
மறந்து  அறிவும் மங்கி
வாய் குளறி கழிவும்
சிந்த துணை கேட்பான்

வார்த்தைகள் பேசிய வாயும்
வழி காட்டிய கைகளும்
ஆட்சி செய்த அறிவும்
உயிரினை காத்த உறுப்பும்

மெலிதாய் நொந்து சுருங்கி
இவன் இனி வேண்டாம் என
விலகிச்செல்லும் நாள் அன்று
ஆசையாய் இவன் நேசித்து

காத்து வளர்த்த மயிரும்
உடல் அழகும் காதலும்
காமமும், கொண்ட பொருளும்
இன்று ஒன்றாய் சூழ்ந்திருக்க

இவனோ வெறும் கூடாய்
உயிரும் உணர்வும் அற்று
அவன் இன்றி அதுவாய்
அழுகும் பிணமாய் கிடப்பான்

மனைவியோ தானும் பிணம்
என்பதறியா இவனைத் தொலைத்தோம்
என்று கதற சுற்றார்
மௌனத்தில் இவன் புகழ் பேசி

மைந்தனுடன் மீண்டும் ஒருமுறை
இறுதியாய் ஒரு பயணம் செல்ல
பயணம் முடிந்தபின் சிதையில்
தீயால் உண்ணப்பட்டு

எலும்பும் சதையும் தான்
என்று இருந்த அவன்
வெறும் சாம்பல் என்றாகி
அதுவும் இன்றி நீரில் கரைந்து

கானா பல உலகம்
காண செல்வான்
உடல் இழந்து உணர்விழந்து
ஆசை காமம் சிக்கி

திரும்ப முடிய வாழ்கை
முடிவில் ஏதும் இல்லா
ஒரு நொடியில் மறையும்
வாழ்க்கைக்கு

இத்தானை கூத்து ஏன்
பற்றறுத்து ஓட வழி அறியா
வாழ்கை ஏன்
ஏதும் வேண்டாம் 

Saturday, April 4, 2015

வேண்டுதல்

வேண்டுதல் வேண்டும்முன் வேண்டுமா என்றுணர
வேண்டுதலை தந்தவன் கால் பற்றி
வேண்டுதலை நீ அறிந்தபின்னும் வேண்டுவனோ
யாதும் கருணையால் சத்தியம் செய்வீரே