Sunday, May 10, 2009

அவள் நினைவில்

உன் முகம் காணும் பொது ஏன் மனம் கலங்கும் 
உன் விழிகள் என்னை வசப்படுத்தும் 
என் விழிகள் நின் அழகை ரசிக்கும்
நின் நினைவில் என் துயர் கரையும்

என்னை கொள்ளை கொண்ட பூரண ஜோதியே
நின்னை எண்ணி சரணடைந்துவிட்டேன்
என்னை கவர்ந்த முழு மதியே
உன்னில் என்னைக்கான்கிறேன்

நின் பதம் பொற்பதம் - அதை
சேருமே என் மனம் 
உன்னில் கரையும் காலம் அது
என் பயணத்தின் பொற்காலம்

உன்னில் மட்டுமே என் நினைவை கொண்டு
தவத்தின் சிகரம் எட்டி - கரைவேன்!
உன்னை அடையும் காலம் என்று? 
மீனாக்ஷி! நீ அறியததுண்டோ!

0 comments:

Post a Comment