Sunday, May 10, 2009

மலரினும் மெல்லிது

மலரினும் மெல்லிது உண்டோ என்று
சிந்தனையில் மூழ்கினேன்!

சுட்டெறிக்கும் சூரியனின் கொடுமை களையும்
நிழல் மலரினும் மெல்லிது - அல்ல

இனிமையான ஓசையுடன் ஓடும் குளிர்
நீரோடை மலரினும் மெல்லிது - அல்ல 

மநக்சோர்வை களையும் சான்றோர் நல்
வாக்கு மலரினும் மெல்லிது - அல்ல

வசீகரிக்கும் இனிய நன் மலர்களின்
நறுமணம் மலரினும் மெல்லிது - அல்ல

ஈன்ற தாயின் உயிர் கலந்த தூய 
அன்பு மலரினும் மெல்லிது!

ஆம் மலரினும் மெல்லிது ஒன்று கண்டேன் 
களிப்பில் நின்றேன்

0 comments:

Post a Comment