Saturday, November 22, 2014

எங்கோ தேடினேன்

அவனோ கண்டதையும் கண்டு
பின் கானா  இடம்  சென்றிருக்க
அவனை  எங்கே  தேடுவேன்

யாத்திரைகள்  பல  சென்று
கோ இல் பல தேடி
யோகம் பல கற்று
மந்திரங்கள் பல செய்து
நோன்புகள் பல கொண்டு
மூச்சையும் நன்கடக்கி
துறவும் ஏற்பட்ட பின்
காண இடம் அதை
எங்கே தேடுவேன்

செல்லா இடம் நோக்கி
செல்லும் பாதை கண்டபின்
சொல்லா வியப்பில் கண்டேன் கண்டேன்
யாதும் அவன் என்றால்
இடம் அது ஒன்றில்லை
பின் நானும் நான் இல்லை

0 comments:

Post a Comment