Monday, December 22, 2014

உள் ஒளி

கண்டேன் கண்டன பல கற்றேன்
கற்றேன் கேட்டவை பல கண்டேன்

மூடனாய் நின்றோருடன்
மூடனாய் நான் ஆக

விஷமியாய் நின்றவரிடம்
விஷமியாய் நான் மாற

மதியோனுடன் நான் சேர
மதியுடையான் ஆனேனே

அவரவர்   சேர்க்கையால்
அவனவன் நான் ஆக

பூதத்தின் சேர்கையில்
கூடாய் இவன் ஆக

ஈசனாய் எறிந்த நின்
தீயாய் ஆவேனோ 

0 comments:

Post a Comment