Tuesday, December 23, 2014

ஒரு தலை ராகம்

அவளைப் பிடித்ததால் தான் நெருங்கினேன்
அவளோ சிணுங்கக்கூட இல்லை

கணவில் அவள் என்னை தருவியபோது
கிடைத்த கிளர்ச்சியை விட

அவள் அறியாது சீண்டிய அவள்
கூந்தல் எந்தன் உயர் குலைத்ததே

நீ சொல்லாத பல காதல் கவிதைகள்
கேட்டதுபோல் நான் பாடினேன்

அன்று நீ சொன்ன வசை சொற்கள்
இன்றும்  இன்னிசையாய் என்னை மயக்கியது

நீ அருகில் நின்ற போதும்
ஆறாத தேக தாகம்

உன்னை மறைந்து ரசித்த பொது
தீர்த்தது உள்ளத்தின் தாகத்தை

காணாத பல நாட்கள் போயினும்
காணும் வரை காதிருக்கத்தொன்றும்

காதிருபத்தின் வலி வேதனைதான்
ஆயினும் கோவம் இல்லை காதல் மட்டுமே

உன் தோழியிடம் நீ சொன்ன
குறும்பு பேச்சுக்கள் கேட்டபோதெல்லாம்

எனக்காக அவளிடம் நீ தூது
சொன்னாயோ என்று நினைத்தேன்

என்று நான் உன்னிடம் சொல்வது
என்றுமே சொல்வதில்லை என் காதலை 

0 comments:

Post a Comment